ராஜபாளையம்: சொத்து பிரச்னை… முன்னாள் ராணுவ வீரரை ட்ராக்டர் வைத்து மோதி, வெட்டிக்கொன்ற கும்பல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முன்னாள் ராணுவ வீரரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, “ராஜபாளையம் அடுத்த குருச்சியார்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(வயது 36). கடந்த சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். ராணுவத்தில் பணியாற்றியபோது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பொன்னுச்சாமி பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பொன்னுசாமி

இதனைத்தொடர்ந்து சொந்த ஊரில் வசித்து வந்த பொன்னுச்சாமி, வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் மனம் விரக்தியடைந்த இவரின் மனைவி முத்துலட்சுமி, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்த பின்னும் தனது வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் பொன்னுச்சாமி ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கீழராஜகுலராமனை அடுத்த கோபாலபுரத்தில் உள்ள தனது நண்பரை, பார்த்துவிட்டு குருச்சியார்பட்டிக்கு டூவீலரில் பொன்னுச்சாமி திரும்பி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், பொன்னுச்சாமி வந்த டூவீலரில் மோதி அவரை கீழே தள்ளியுள்ளனர்.

இதில், நிலைதடுமாறி கீழேவிழுந்த அவர், சுதாரித்து எழுவதற்கு முன்பு அந்த மர்ம கும்பல் பொன்னுச்சாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயமடைந்த பொன்னுச்சாமி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீழராஜகுலராமன் போலீஸார், பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பொன்னுச்சாமியின் தாய்வழி பூர்வீக சொத்து தொடர்பாக பொன்னுசாமிக்கும், அவரின் உறவினர்களுக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது தெரிய வந்தது.

ராஜபாளையம்

இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக பொன்னுச்சாமி கொலை செய்யப்பட்டிருக்காலம் எனக்கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையில், குறிச்சியார்பட்டியை சேர்ந்த ராமநாதன் என்பவர், கடந்த ஜனவரி மாதம் பொன்னுச்சாமி மீது காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததன் அடிப்படையில், ராமநாதனுக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே பகை இருந்துவந்துள்ளது. இதற்கு பழிதீர்க்கவே, பொன்னுச்சாமியை கொலைசெய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதன்படி, தங்கவேல், ராமநாதன், மீனாட்சிபுரத்தை சேர்ந்த இருளப்பன், முதுகுடியை சேர்ந்த முனீஸ்வரன்‌ ஆகியோர் சேர்ந்து பொன்னுச்சாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்த போலீஸார், சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.