அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிப்பு தடையாக இருக்காது..

அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்ந வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிப்புக்கள் தடையாக இருக்காது என்று கடற்றொழில் அஇமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்க வேலைத் திட்டங்கள் முன்னெடுககப்படும் போது, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராக அவை பயன்படுத்தப்படுமாயின், தேர்தல்கள் ஆணைக்குழு தமது கரிசனையை வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்ச மாவட்ட செயலகத்தில் நேற்று (26) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்திலேயே அமைச்சர் இது குறித்து அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முனனேற்றங்கள் குறித்தும் அமைச்சர் அங்கு கலந்துரைராடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.