டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள ரவு’ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில வாரங்களாக டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதில் பயிற்சி […]