இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்; 10 பேர் பலி – உடனடியாக நாடு திரும்புகிறார் நெதன்யாகு

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலயில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குழந்தைகள் உள்பட 10 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

தெற்கு லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுவை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால், அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்புகிறார் என அவருடைய அலுவலம் தெரிவித்து உள்ளது.

இந்த ராக்கெட் தாக்குதல் பற்றி ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுவினர் கூறும்போது, லெபனானில் கிராமம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதற்கு பதிலடியாக, கோலன் ஹைட்சில் உள்ள ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்தது.

எனினும், இஸ்ரேலின் ராணுவ உயரதிகாரி டேனியல் ஹகாரி கூறும்போது, ஹிஜ்புல்லா அமைப்பு பொய் கூறுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளுக்கு எதிராக போர் தொடுக்கும்படி இஸ்ரேல் தலைவர்களிடம் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நெருக்கடி எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது நடந்த இந்த கொடிய தாக்குதலால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.