மகாராஷ்டிரா: `போலீஸ் தேர்வுக்கு போகனும்’ – வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமம்; உதவிய மீட்புக்குழு

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர். மாவட்டம் முழுக்க கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கட்சிரோலி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே கட்சிரோலி மாவட்டம் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்தது. அப்படிப்பட்ட மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியான அபுஜ்மார் மலைப்பகுதியை சேர்ந்த 20 பேர் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்கள் கட்சிரோலிக்கு வரமுடியாத அளவுக்கு ஊரை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்து இருந்தது.

இதனால் எப்படி போலீஸ் தேர்வுக்கு செல்வது என்று தெரியாமல் திணறினர். இது குறித்து அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் நீலோத்பால் இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். அங்குள்ள பார்லோகோடா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் 20 பேர் வசித்த கிராம பகுதி மற்ற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் போலீஸார், மீட்புபடையினரின் துணையோடு பிளாஸ்டிக் படகு மற்றும் லைஃப் ஜாக்கெட் துணையோடு 20 பேரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் முதலில் படகு மூலம் எடப்பல்லி என்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு இரவில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு சாப்பாடு வழங்கப்பட்டது. காலையில் அவர்கள் அனைவரையும் கட்சிரோலிக்கு அழைத்து சென்று போலீஸ் தேர்வில் கலந்து கொள்ள போலீஸார் உதவி செய்தனர். மொத்தம் 1,202 பெண்கள் உட்பட் 6,711 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு கட்சிரோலியில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களில் 62 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதே போன்று இதேமாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பட்பர் என்ற கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் மழை வெள்ளத்தில் காயம் அடைந்தார். அவரை கிராம மக்கள் ஒரு கட்டிலில் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். கட்டிலில் ஒரு படகில் ஆற்றையும் கடந்து சென்று பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மருத்துவமனையை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.