வாகன இறக்குமதிக்கான பாதை வரைபடம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்..

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார்.

அக்டோபர் மாதம் ஆகும்போது பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும்; அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வாகன இறக்குமதி குறித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தேவையான அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக எதிர்கால பாதை வரைபடம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு இணங்க கொடுப்பனவுக் கணக்கின் மீதி மற்றும் வெளிநாட்டு செலாவணி மீது செல்வாக்கு செலுத்தாதவாறு இறக்குமதி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் விவரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.