`30-40 வயது விவாகரத்தான பெண்கள் டார்கெட்’ – ரிசர்வ் வங்கி அதிகாரி என 40 பெண்களிடம் மோசடி செய்த ஆசாமி

திருமண மேட்ரிமோனியல் இணையத்தளம் பிரபலமான பிறகு, அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளது. மும்பையில் ஒருவர் தன்னை ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி என்றும், டாக்டர் என்றும் கூறி நாடு முழுவதும் ஏராளமான பெண்களிடம் மோசடி செய்துள்ளார். மும்பை நாலாசோபாராவை சேர்ந்த 38 வயது விவாகரத்தான பெண் இது தொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் 43 வயது பெரோஸ் அகமத் நியாஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய போலீஸார் மேட்ரிமோனியலில் போலி ஐ.டியை உருவாக்கி அதன் மூலம் பெரோஸை சிக்க வைத்து கைது செய்தனர். அவனை கைது செய்து விசாரித்த போது நாடு முழுவதும் ஏரளமான பெண்களை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து நாலாசோபாரா சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய் சிங் கூறுகையில், ”பெரோஸ் மேட்ரிமோனியல் தளத்தில் பெரோஸ் மற்றும் வினய் ரஜபுத் ஆகிய இரு பெயர்களில் ஐ.டி.உருவாக்கி இருந்தார். அதில் தான் ரிசர்வ் வங்கி அதிகாரி என்றும், டாக்டர் என்றும் குறிப்பிட்டு இருந்தான். இரு ஐ.டி மூலம் பணக்கார இந்து மற்றும் இஸ்லாமிய பெண்களை எளிதில் பெரோஸ் கவர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் அப்பெண்களை கவரும் வகையில் பேசி இருக்கிறார். பின்னர் அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு தனது வேலையை காட்ட ஆரம்பிப்பார். பெரும்பாலும் 30 வயது முதல் 40 வயது வரையிலான விவாகரத்தான பெண்களை குறிவைத்துத்தான் பெரோஸ் செயல்படுவான். அப்படிப்பட்ட பெண்கள்தான் உணர்வுபூர்வ அன்புக்காக ஏங்குவார்கள் என்பதால் அதனை குறிவைத்து செயல்பட்டதாக பெரோஸ் தெரிவித்துள்ளான்.

அப்பெண்களிடம் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர்களை தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்வான். அப்பெண்களும் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு அவனுடன் திருமணத்திற்கு செல்வர். திருமணத்திற்கு செல்லும்போது அப்பெண்கள் எப்போதாவது வாஷ்ரூம் செல்லவேண்டும் என்று விரும்பினால் எதாவது காரணத்தை சொல்லி வாஷ்ரூம் செல்லும் முன்பு அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுக்கும்படி கூறுவார். பெண்களும் நகைகளை கழற்றி கொடுத்துவிட்டு வாஷ்ரூம் செல்லும்போது தங்க நகைகளுடன் தலைமறைவாகிவிடுவான். இதே போன்று திருமணத்துக்கு வரும் பெண்களை அழகு நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழக்கத்தையும் கொண்டுள்ளார். அப்படி அழைத்துச்செல்லும் போது ஆடம்பர கார்களை பயன்படுத்துவார். அழகு நிலையம் செல்லும் போது ஆபரணங்கள் அணியக்கூடாது என்று சொல்லி அனைத்து ஆபரணங்களையும் கழற்றி காரில் வைத்துவிட்டு செல்லும்படி கேட்டுக்கொள்வான். அவர்களும் கழற்றி வைத்துவிட்டு அழகு நிலையம் செல்வார்கள்.

மோசடி

அவர்கள் அழகு நிலையத்தில் இருந்து வருவதற்குள் பெரோஸ் தப்பிச்சென்று இருப்பான். பெண்களை கவர எப்போதும் பெரோஸ் ஆடம்பர பொருள்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனிடமிருந்து கார், டெபிட், கிரெடிட் கார்டு, ஜூவல்லரி உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெண்களிடம் மோசடி செய்து அளவுக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளான்” என்றார்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெரோஸ் நவிமும்பை பேலாப்பூரில் ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறார். மும்பை, புனேயில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட பெண்கள் பெரோஸிடம் ஏமாந்துள்ளனர். இதே மோசடிக்காக 2016-ம் ஆண்டு பெரோஸ் கைது செய்யப்பட்டான். அவ்வழக்கில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்து மீண்டும் வேலையை காட்டியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.