Wayanad: "அவர்கள் மீண்டு வர எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க!" – நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்!

தந்தை தியாகராஜன் இயக்கத்தில பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரசாந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9-ல் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் முன்னோட்டமாக முதன் முதலாக மதுரையில் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்துள்ளேன். தென் மாவட்டங்களில் மிக முக்கியமான நகரம் மதுரை.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில்

சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதா, யோகிபாபு என எல்லோரும் சிறப்பாக நடித்து படம் நன்றாக வந்துள்ளது. டிரையிலரை பார்த்த எல்லாரும் படம் நன்றாக வந்திருப்பதாகச் சொன்னார்கள். தளபதியும் டிரெய்லரை பார்த்து படம் நன்றாக இருப்பதாகச் சொன்னார். வயநாடு பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவுதான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்னாலும் ஈடு செய்ய முடியாது. உங்களில் யார் யார் எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்கள். நாங்களும் உதவிகள் பண்ணுகிறோம்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.