புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக 'ஓட்டமாவடி சந்தை வீதி' தற்காலிகமாக மூடப்படும்…

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத பாதையில் பூனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ‘ஓட்டமாவடி சந்தை வீதி’ புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, 2024.08.03ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.30 வரை முழுமையாகவும், அதே தினம் மாலை 04.30 முதல் (மறுநாள்) 2024.08.04ஆம் திகதி இரவு 10.00 மணி வரை பகுதியளவிலும் இந்த பாதையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வீதி மூடப்படும் நேரத்தில் மாற்றுவழியை பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.