கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய 'திதுலன தாரக்கா'

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான ‘திதுலன தாரக்கா’ என்ற நூல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு நூலாசிரியரால் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு நேற்று (01) வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம் பெற்றது.

இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுதிய முதலாவது ஆய்வு நூலாக இந்நூல் பல்கலைக்கழக பேராசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.