தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `அதிகாரிகளின் சொத்து விவரங்கள்’ தொடர்பான உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டு வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் 100வது நாளில் நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைக்கப்பட்டது.

போரட்டத்தில் தள்ளுமுள்ளு

அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும் மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை  குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

 இதைத் தொடர்ந்து, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். இரண்டு வாரங்களில் அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஜூலை 15-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எஸ்.சந்திரன், சைலேஷ்குமார்  உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

குவிக்கப்பட்ட போலீஸார்

அம்மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர் திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கினை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இருப்பினும் சம்பவம் நடந்தபோது இருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் சொத்து விவரங்களை சேகரிக்க மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, மற்றொரு விசாரணை அமைப்பு எப்படி விசாரிக்க முடியும்?  எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, “இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

போராட்டத்தில் கூடிய கூட்டம்

இருப்பினும், மேல் முறையீட்டு மனு தொடர்பாக எதிர் மனுதாரர் தரப்பு பதிலளிக்க வேண்டும் எனவும், இந்த மனு மீது தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்”என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.          

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.