ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தங்கலான் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்கச் சுரங்கத்தில் சுதந்திரத்திற்கு முன் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று பெங்களூரில் தங்கலான் பட நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்கலான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அவர் வெளியிட்டிருந்த பதிவில், “24 ஆண்டுகள் கழித்து எனது ஹீரோவை நேரில் சந்தித்தது, உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதனாக என்னை உணர வைக்கிறது. ஒரு நடிகனாக மாறுவதற்கான எனது பயணத்தில் விக்ரம் எப்போதுமே எனக்கு இன்ஸ்பிரேஷன்தான்.
In my journey in becoming an actor, #Vikram Sir has always been my inspiration.
After 24 long years of waiting, meeting my idol today makes me feel like the luckiest person on Earth.
Thank you for inspiring actors like me, and wishing you all the best for #Thangalaan.
Love… pic.twitter.com/CrmwnW4CEM— Rishab Shetty (@shetty_rishab) August 6, 2024
என்னைப் போன்ற நடிகர்களை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி சார். தங்கலான் வெற்றியடைய வாழ்த்துகள்” என்று விக்ரம் உடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.