கண்டி எசல பெரஹர இறுதி வீதி ஊர்வலத்தில் இராணுவ தளபதி பங்கேற்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து கண்டி எசல பெரஹெரவின் இறுதி நாளான 2024 ஆகஸ்ட் 19 அன்று மாரந்தோலி ஊர்வலத்தைக் கண்டுகளித்தார்.

இந்த பாரம்பரிய ஊர்வலம் இலங்கையின் மிக முக்கியமான கலாசார நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இந்த நிகழ்வில் முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில்,கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளும் கலந்துகொண்டனர். முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களின் துணைவியார் மற்றும் பல அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.