பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 5.1 புள்ளிகளாக பதிவானது. அப்போது அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.