“கேரவனில் ரகசிய கேமரா; பெண்கள் உடை மாற்றும் வீடியோ…!"- நடிகை ராதிகா சொன்ன அதிர்ச்சித் தகவல்..!

ஹேமா அறிக்கை மூலம் வெளியான பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

சினிமாத் துறையில் உள்ள பலரும் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ராதிகா சரத்குமார் கேரவனில் ரகசிய கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து ரசிப்பதாக அதிர்ச்சியானத் தகவலை தெரிவித்திருக்கிறார்.

ராதிகா சரத்குமார்

இதுதொடர்பாக மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் ,” நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து துறைகளிலும் உள்ளது. மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

நான் அதைப்பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். பிறகு அதுகுறித்து விசாரித்த போதுதான், அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடையை மாற்றினேன்.

ராதிகா சரத்துக்குமார்

இது குறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இங்கு சினிமாவில் சிஸ்டமே தவறாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ராதிகா சொன்ன இந்த அதிர்ச்சித் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.