டெங்கு அபாயமுள்ள மாவட்டங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (02) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அந்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 36,728 ஆகவும் அதில் 15,208 டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலும் 4703 வட மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர்.

இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.