இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்…

தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு இது மிகவும் நல்ல முடிவாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.