ஹிஜ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல்; போரின் புதிய கட்டம் தொடக்கம் என இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ்,

லெபனான் நாட்டில் உள்ள ஹிஜ்புல்லா பயங்கரவாத இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்ட் எக்ஸ் ஊடகத்தில் கூறும்போது, போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடைய கவனம் வடக்கு பகுதியில் செலுத்தப்படும் என உறுதியுடன் தெரிவித்து உள்ளார்.

அந்த பகுதியில் வளங்களையும், படைகளையும் ஒதுக்கியுள்ளோம். எங்களுடைய திட்டம் தெளிவாக உள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதி சமூகத்தினரை அவர்களுடைய சொந்த வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்ப செய்வதற்கான பணிகள் உறுதி செய்யப்படும். இதற்கு பாதுகாப்பு சூழ்நிலை நிச்சயம் மாற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், ஹிஜ்புல்லா பயங்கரவாதிகளின் திறன்களை குறைப்பதற்காக, லெபனானில் அவர்களுடைய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

பல தசாப்தங்களாக, பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்களை பதுக்கி வைக்கும் பகுதிகளாக மாற்றி வைத்தும், அவற்றுக்கு அடியில் சுரங்கங்களை அமைத்தும், பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியும், தெற்கு லெபனான் பகுதியை ஒரு போர் மண்டலம் போல் மாற்றி வைத்து உள்ளனர். போர் இலக்குகளை எட்டுவதற்காக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஜ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக, பேஜர் கருவிகளை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தங்களுடைய இருப்பிடம் பற்றிய விவரங்கள் வெளியே தெரிய வராது என்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றனர். இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சூழலில், சில நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்ததில் பலர் சிக்கி கொண்டனர். இதில், லெபனானில் 12 பேர் உயிரிழந்தும், 2,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அடுத்த சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது. லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது. 450 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

லெபனானில் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்த நிலையில், அடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்தது. இதனை தொடர்ந்து, லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பலர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தெற்கு லெபனான், பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகள் மற்றும் மத்திய பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டனர். இதனால், 60 வீடுகள் மற்றும் கடைகளில் தீ பரவியது. அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் நடந்தது. இந்த சம்பவத்தில் 15 கார்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் தீப்படித்து கொண்டன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.