Jayam Ravi: "அவர் ஆதரவற்ற பெண்; யாரையும் இழுக்க வேண்டாம்" – வதந்திகளுக்கு விளக்கமளித்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி குறித்து பரவும் வதந்திகளுக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார்.

ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் ஆர்த்தி ‘திருமண பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்தமுடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல’ என்று கூறியிருந்தார். இது சமுக வலைதளங்களில் பேசுபொருளானது.

ஜெயம் ரவி- ஆர்த்தி

இதனிடையே ஜெயம் ரவி மனைவியைப் பிரிந்ததற்கு பாடகி ஒருவர்தான் காரணம் என்று சமூக வலை தளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஜெயம் ரவி இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். ” ‘வாழு, வாழவிடு’. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்கள்.

தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதில் யாரையும் இழுக்க வேண்டாம். அவர் ஒரு ஆதரவற்ற ஒரு பெண். தனி ஆளாக நிறைய ஸ்டேஜ் ஷோக்களைச் செய்திருக்கிறார்.

ஜெயம் ரவி

ஒரு மனநல ஆலோசகராக பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். எதிர்காலத்தில் நானும், அவரும் ஒரு ஹீலிங் சென்டரை அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தயவு செய்து அதைக் கெடுத்துவிடாதீர்கள். யாராலும் அதைக் கெடுக்கவும் முடியாது” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.