வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்..

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 17,140,354 வாக்காளர்கள் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதன்படி, 9வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.