CWC 5: `டைட்டிலை வென்ற பெண் போட்டியாளர்' – இரண்டாவது இடம் யாருக்குத் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி சீசன் 5 இந்த வாரத்துடன் நிறைவு பெறவிருக்கும் சூழலில், நிகழ்ச்சியின் ஃபினாலே ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் நடந்தது.

நடந்து முடிந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று கு.வி.கோ. சீசன் 5க்கான டைட்டிலை வாங்கியிருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. இறுதிச் சுற்றின் ஷூட்டிங்கை மேற்கோள்காட்டி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதைத் தெரிவிக்கின்றன.

குக்கு வித் கோமாளி சீசன் 5 விஜய் டிவியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகி வருவதை அறிவீர்கள்.

CWC 5

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் நடிகை சுஜிதா,, தொகுப்பாளர்  பிரியங்கா தேஷ்பாண்டே, வி.டி.வி.கணேஷ், ஷாலின் ஷோயா, வசந்த் வசி, முதலான சிலர் குக்குகளாகவும் சுனிதா கோகோய், முகமது குரேஷி, ஷப்னம், நாஞ்சில் விஜயன், உள்ளிட்ட சிலர் கோமாளிகளாகவும் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நாஞ்சில் விஜயன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

அதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ‘பிரச்னை தனக்கும் நிகழ்ச்சியின் தயாரிப்பு தரப்புக்கு தானே தவிர சேனலுடன் எந்தச் சிக்கலும்  இல்லை’ என அவர் விளக்கம் தந்தது  நினைவிருக்கலாம்.

பிரியங்கா தேஷ்பாண்டே

தொடர்ந்து நிகழ்ச்சியின் எவிக்‌ஷன் புராசஸ் நிகழ்ந்து எலிமினேட் ஆகும் போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

நிறைவாக, நடிகை சுஜிதா, பிரியங்கா, இர்பான் உள்ளிட்ட ஐந்து பேர் இறுதிச் சுற்றில் இருந்த நிலையில்,

இறுதிச் சுற்றுக்கான போட்டியில் பிரியங்கா டைட்டிலை வெல்ல, இர்பான் ரன்னராக அதாவது இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறார் எனகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.