Jayam Ravi: உடைமைகளை மீட்டுத் தாருங்கள்… மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்?!

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துச் செய்வதாகவும், இருவரும் பிரிந்து வாழப் போவதாகவும் சமீபத்தில் ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஆர்த்தி, “எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையைப் பார்த்து நான் கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

ஜெயம் ரவி

இதுதொடர்பான விஷயங்கள் திரைத்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகவே, ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிந்ததற்குப் பாடகி ஒருவர்தான் காரணம் என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வைரலானது.

அத்தகைய சர்ச்சைகளுக்கு, “தவறானத் தகவல்களைப் பரப்புகிறார்கள். இதில் யாரையும் இழுக்க வேண்டாம். ‘வாழு, வாழவிடு’. தனிப்பட்ட வாழ்க்கையைத் தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்கள்” என்று முற்றுப் புள்ளி வைத்துப் பேசியிருந்தார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி

இந்த நிலையில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. மேலும், ஜெயம் ரவி தனது புகாரில், சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத் தர வேண்டும் என்று காவல் துறையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.