பத்லாபூர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்ட்டர்: எதிர்க்கட்சிகள் சாடல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அக்‌ஷய் ஷிண்டே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் ஆதாரத்தை அழிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நெருங்கி வருவதால், இந்த என்கவுன்டர் அங்கு அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த என்கவுன்ட்டர் விவகாரம் மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி, எதிர்க்கட்சியினரிடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. இதுகுறித்து, மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைகளில் விலங்கிடப்பட்டிருக்கும் போது எவ்வாறு துப்பாக்கியால் சுட்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், "அக்‌ஷய் ஷிண்டேயின் கைகள் இரண்டிலும் விலங்கிடப்பட்டிருந்த நிலையில் அவரால் எப்படி துப்பாக்கியால் சுட்டிருக்க முடியும்? சம்பவம் நடந்த பள்ளி பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.