தீபாவின் கண் எதிரே கார்த்திக்குக்கு கல்யாணம் நடக்குமா? பரபரப்பான கார்த்திகை தீபம் எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஆசிரமத்தில் இருக்கும் நர்ஸ் தீபாவுக்கு தனக்கு தெரிந்த வைத்தியத்தை பார்க்க இங்கே தூக்கத்தில் இருந்த கார்த்திக் திடீரென எழுந்து தீபாவுக்கு ஏதோ ஆபத்து என்பது போல் தோன்றுவதாக பீல் செய்ய கீதா தீபாவுக்கு எதுவும் ஆகாது என்று கூல் செய்கிறாள். 

மறுபக்கம் தீபாவுக்கு காய்ச்சல் குறையாத நிலையில் என்னென்னமோ செய்து பார்க்கின்றனர். ஆனாலும் காய்ச்சல் குறையாத காரணத்தால் ஷக்திக்கு தகவல் கொடுக்க அவளும் ட்ரீட்மெண்ட் கொடுக்க அப்போதும் குணமாகாத காரணத்தால் ஒரு டாக்டருக்கு போன் செய்கிறாள். 

டாக்டரிடம் தனது உறவுக்கார பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி என்ன ட்ரீட்மென்ட் கொடுப்பது என்று விசாரிக்க அவர் சில வழிமுறைகளை சொல்ல அதையும் பின்பற்றி பார்க்க அப்போதும் எந்த பயனும் இல்லை என்று தெரிய வருகிறது. 

இதனால் டாக்டர் அந்த பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர சொல்ல ஷக்தி, துங்காவுக்கு பயந்து தயங்கினாலும் வேறு வழியில்லை என்பதால் தீபாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல முடிவெடுக்கிறாள். 

அடுத்த நாள் காலையில் கார்த்திக்கு, தீபாவின் கண் எதிரே கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று திட்டமிடும் அபிராமி விஷயத்தை சொல்லாமல் எல்லாரையும் கோவிலுக்கு அழைத்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.