Sobhita Dhulipala: `மனதிற்கு நெருக்கமானது' நிச்சயதார்த்தம் குறித்து நெகிழ்ந்த சோபிதா துலிபாலா

இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சோபிதா துலி பாலா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இதனிடையே சில மாதங்களாக சோபிதா துலிபாலாவும், நாக சைதன்யாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இருவரும் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அதனை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் அதிகாரப் பூர்வமாக அறிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது நிச்சயதார்த்தம் குறித்த அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா

இதுதொடர்பாக பேசியிருக்கும் நடிகை சோபிதா துலிபாலா, ” எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்போது எந்த ஒரு எதிர்பார்போ அல்லது திட்டமிடலோ என்னிடம் இல்லை. நான் நினைத்தப்படியே நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாகவும், இனியதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் நடைபெற்றது. அந்த கணமே என்னை நிரப்பியது. இது போன்ற தருணங்களில் தெலுங்கு மக்களின் சடங்குகள் சார்ந்த விஷயங்கள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.