இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கைது!

இலங்கை கடற்படையினர் நேற்று (29) காலை மன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீன்பிடி படகுகள் உட்பட 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிப் படகுகுள்;; மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் படகில் இருந்த பதினேழு (17) இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 55 இந்திய மீன்பிடிப் படகுகளும், 413 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டடுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.