பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை..

கரஸ்னாகலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீரை விநியோகிக்கும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (02) இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி பஸ்யால, கலல்பிட்டிய, எல்லேருமுல்ல, வத்துபிட்டிவல, மாஒம்புல, அத்தனகல்ல, கொடகம, அலவல, ஊரபொல, திக்கந்த, வல்கம்முல மற்றும் மிடிகம்மான ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.