2200 வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கெக்கிராவ பிரதேசத்தில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி கெகிராவ பலலுவெவ பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கடையொன்றில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட இரண்டாயிரத்து இருநூறு (2200) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கெக்கிராவ பலலுவெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான கடையொன்று சோதனையிடப்பட்டுள்ளது. அங்கு, குறித்த கடையில் விற்பனைக்கு தயாராக இருந்த இரண்டாயிரத்து இருநூறு (2200) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலலுவெவ பலாகல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிரியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.