திருச்சி: மாணவர்களிடம் ரூ.33 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா..? போலீஸார் விசாரணை..!

திருச்சி மாநகரில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாள்களாக, திருச்சி மாநகர போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் உறையூர் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு மேன்சன் அறையில், பிளாஸ்டிக் பையில், 500 ரூபாய் நோட்டுகளாக, ரூ.33 லட்சம் ரூபாய் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

அப்பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அந்த அறையில் தங்கியிருந்த லால்குடியைச் சேர்ந்த பிரபு (வயது 30), கிருஷ்ணன் (வயது 27) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்ததால், அந்த பணம் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் இருவரையும் திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் உறையூர் போலீஸார் ஒப்படைத்தனர்.

திருச்சி

இருவரிடமும் பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பணத்தை யாரிடம் கொடுக்க அவர்கள் பணத்தை பதுக்கி வைத்திருந்தனர் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் தங்கும் விடுதியில் கணக்கில் வராத ரூ. 33 லட்சம் பணத்தோடு இளைஞர்கள் இருவர் கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.