திண்டுக்கல்: கொலை வழக்கில் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை; பின்னணி என்ன?

திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் முகமது இர்பானை(24) செப்டம்பர் 28 ஆம் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை மர்ம நபர்கள் செய்தனர். இவருக்குக் கடந்த ஆண்டு நடந்த பட்டறை சரவணன் கொலையில் தொடர்பு இருக்கிறது. இதனால் பழிக்குப் பழியாக முகமது இர்பான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

ரிச்சர்டுசச்சின்

தனிப்படை போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சரணடையப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. அன்றைய தினம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடையவில்லை.

இதையடுத்து காவல்துறையின் தேடுதல் வேட்டையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய எடிசன் சக்கரவர்த்தி, மார்ட்டின் நித்திஷ், ரிச்சர்டு சச்சின், பிரவீன் லாரன்ஸ் ஆகியோரை பிடித்தனர். இதில் ரிச்சர்டு சச்சின் என்பவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காகச் சென்றபோது அவர் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றார்.

இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி

திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி துப்பாக்கியால் ரிச்சர்டு சச்சின் காலில் சுட்டுப் பிடித்தார். இதில் காவலர் அருண் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.