“வெல்கம் டு தி தமிழ் இண்டஸ்ட்ரி… புன்னகையுடன் சொன்னார்!" – ரஜினி குறித்து வேட்டையன் வில்லன்

ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேட்டையன்.

இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், சாபுமோன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பேசியிருக்கிறார்.

வேட்டையன் படத்தில்… ரஜினி

படப்பிடிப்பின்போது இயக்குநர் ஞானவேல் என்னை ரஜினி சாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது என்னை அவர் சார் என்று அழைத்தார். நான் திகைத்துபோய் நின்றேன். எனக்கு பேச்சே வரவில்லை. பிறகு அவர் என் தோளைத் தட்டிக்கொடுத்தார். அப்போது புரிந்தது அவர் தமிழ் மக்கள் மனதில் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்தார் என்று. இது எனக்கு தமிழில் முதல் படம் என்று தெரிந்ததால் ‘வெல்கம் டு தி தமிழ் இண்டஸ்ட்ரி’ என்று புன்னகையுடன் கூறினார்.

சாபுமோன்

எட்டு நாள்கள் நாங்கள் சேர்ந்து நடித்திருந்தாலும் அவருடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை. அவர் கூறிய வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் இருக்கும். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது என வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சிறந்த தருணம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.