கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று (05) மற்றும் இன்று (06) என இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.

இரு நாட்களும் (5ம் மற்றும் 6ம் திகதிகளில்) கிழக்குப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கமின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் வழங்கி உறுதிசெய்தார். 

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் (யாழ்ப்பாணம்) ஸ்ரீ சாய் முரளி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

முதல் நாள் முதல் அமர்வில் 2340 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின் படிப்பு பட்டங்கள் 2023ம் ஆண்டுக்கான பொது பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டது. .

இன்று (06) இரண்டாவது நாள் இரண்டாம் அமர்வு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.