Kayal & Karthigai Deepam : கயலை பற்றி மூர்த்தி சொல்லும் உண்மைகள் | கார்த்திக் செய்த அதிரடி

கயல் சீரியலில் எழில் சண்டை போட்டு கயலை மீட்டு வந்துவிட்டார். ஆனால் அதை யார் செய்தார்கள் என்று முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.

நேற்றைய எபிசோடில் கயலின் சகோதரர் மூர்த்தி தன் தங்கையைப் பற்றி நெகிழ்ச்சியான நினைவுகளை மனைவியிடம் பகிர்ந்து கொள்கிறார். சீரியல் ஆரம்பமானதில் இருந்தே மூர்த்தி தன் தங்கை கயலை அடிப்பது, திட்டுவது என கொடுமைப் படுத்துவார். ஆனால் தற்போது மனம் திருந்தி குடிப்பழக்கத்தை விட்டு கயலின் கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைக்கிறார்.

கயல்

கயலை ரொம்ப பிடிக்கும், சின்ன வயசுல இருந்தே ரொம்ப தைரியமான பொண்ணா இருப்பா என்று கயலை புகழ்கிறார். கயலின் திருமணம் நடக்கும் மகிழ்ச்சியில் தூக்கமே வரல என்கிறார்.

சிறிய வயதில் இருந்தே கயலை மிகவும் பிடிக்கும் என்னும் உண்மையையும் மூர்த்தி சொல்கிறார். தங்கை மீது இவ்வளவு பாசத்தை மனதில் மறைத்து வைத்திருக்கிறாரே என்று மூர்த்தியின் மனைவி ஆச்சரியப்படுகிறார். 

மற்றொரு புறம் கயலின் அக்கா, தங்கை ஆகியோரும் கயலை பற்றி சொல்லி பெருமைப்படுகின்றனர். எழிலும் கயலின் புகைப்படத்தை வைத்து, நீ கடவுள் கொடுத்த வரம் கயல் என்று நெகிழ்ந்து பேசுகிறார்.

Kayal serial

கயலின் அத்தை, மாமா, ராஜி ஆகியோரும் மும்முரமாக கல்யாண வேலைகளை பார்க்கின்றனர். கயலின் அம்மா காமாட்சியிடம் ஒருவர் கயலின் கல்யாணத்தை பற்றி தவறாகப் பேச, ராஜேஸ்வரி தன் அண்ணிக்கு ஆதரவாக பேசுகிறார். இதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது. திருமணத்துக்கு அலங்காரம் செய்கின்றனர். எனவே எப்படியும் அடுத்து வரும் எபிசோடுகளில் கயல்-எழில் கல்யாணம் நடந்துவிடும் என்று நம்புவோம்.

Karthigai Deepam

கார்த்திகை தீபம் : கார்த்திக்கின் வலையில் சிக்கிய ஐஷ்வர்யா 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்கிறது. 

 இந்த வாரம் ஒளிபரப்பாக போகும் காட்சிகளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தீபா கிடைத்துவிட்டதாக கார்த்திக் வீட்டில் இருக்கும் அனைவரையும் நம்ப வைக்கிறார். ஐஷ்வர்யாவைத் தவிர அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். கீதாவை தீபா போல மாற்றி, தலையில் கட்டுக் கட்டி வீட்டுக்கு அழைத்து வருகிறார் கார்த்தி. ஆரத்தி எடுத்து கார்த்திக்கின் அம்மா தீபாவை வரவேற்கிறார்.

Karthigai Deepam

தீபாவாக வந்திருக்கும் கீதா ஐஷ்வர்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி மாடிக்கு அழைத்து செல்கிறார். அந்த சமயத்தில் கார்த்தி வீட்டில் இருப்பவர்களிடம் வந்திருப்பது கீதா தன என்னும் உண்மையை சொல்கிறார். அதன் பின்னர் தனியறையில் கீதா ஐஷ்வர்யாவிடம் என்னை மலையில் இருந்து நீங்க தானே தள்ளிவிட்டீங்க என்கிறார்.

ஐஷ்வர்யா அதிர்ந்து போய் ஆமாம் தெரியாம பண்ணிட்டேன் என்கிறார். இதை வீட்டில் இருப்பவர்கள் போன் மூலம் கேட்கின்றனர். ஐஷ்வர்யா செய்த கொலை முயற்சியை அவரே தன் வாயால் ஒப்புக்கொள்கிறார். போலீஸ் வந்து அவரை கைது செய்கிறது. இனி வரும் எபிசோடுகளில் கார்த்திக் தீபாவை எப்படியும் கண்டுப்பிடித்து விடுவார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.