வார ராசிபலன்: அக்டோபர் 7 முதல் அக்டோபர் 13 வரை

இந்த வார ராசிபலன் – ராசிபலன் அக்டோபர் 7 முதல் அக்டோபர் 13 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி.

மேஷராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சற்று சுணக்கம் ஏற்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பணியில் இருக்கும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மேஷம்

அதிர்ஷ்ட நாள்கள்: 11, 13

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

சந்திராஷ்டமம்: 7,8,9 விடியற்காலை வரை

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த

ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

ரிஷபராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்குத் திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர்கள் மூலம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்குப் பதவிஉயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. சிலருக்கு, அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள். நெருக்கடியான நிலையிலும் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

அதிர்ஷ்ட நாள்கள்: 7, 13

அதிர்ஷ்ட எண்கள்:2, 6

சந்திராஷ்டமம்: 9 விடியற்காலை முதல் 10, 11 முற்பகல் வரை

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி

வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கு முடலே போற்றி

ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி

தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி

கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

மிதுனராசி அன்பர்களே!

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடந்த சில நாள்களாகக் கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்களும் உறவினர்களும், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும்.

சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதி ஏற்படவும் கூடும். பணி செய்யும் பெண்களுக்கு பணிச்சுமை குறைவதால் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

மிதுனம்

அதிர்ஷ்ட நாள்கள்: 8, 9

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

சந்திராஷ்டமம்: 11 முற்பகல் முதல் 12, 13 மாலை வரை

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

கடகராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும். பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டா கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கடகம்

அதிர்ஷ்ட நாள்கள்: 9, 12

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

சந்திராஷ்டமம்: 13 மாலை முதல்

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீறணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது

பூமி திசை தெய்வமானபலவும்

அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

சிம்மராசி அன்பர்களே!

எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், அலைச்சல் மட்டும் சற்று அதிகரிக்கும். நெருக்கடியான காலங்களில் வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்ற சிந்தனை அதிகரிக்கும்..

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. பணியில் இருக்கும் பெண்களுக்கு அலுவலகப் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாதபடி வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்

அதிர்ஷ்ட நாள்கள்: 10, 13

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்

கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பொருள்களைக் கொள்முதல் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் புகுந்தவீட்டில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

கன்னி

அதிர்ஷ்ட நாள்கள்: 10, 12

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசனெந்தை யிணையடி நீழலே.

துலாராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில ஆதாயங்கள் ஏற்படக் கூடும்.

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதிகாரிகள் சில நேரங்களில் கண்டிப்பாகப் பேசினாலும் அனுசரணையாகவும் இருப்பார்கள்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டியது அவசியம்.

துலாம்

அதிர்ஷ்ட நாள்கள்: 8, 11

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்

சஷ்டி கவசம் தனை.

அமரரிடர்தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி

விருச்சிகராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். தந்தையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகாரி களிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக் கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். பணியில் இருக்கும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள்.

விருச்சிகம்

அதிர்ஷ்ட நாள்கள்: 7, 10

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்

கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

தனுசுராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. ஆனாலும், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் விட்டுப்பிடித்துச் செல்லவும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று கூடிவரும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபட வேண்டி வரும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். பணியில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

தனுசு:

அதிர்ஷ்ட நாள்கள்: 8, 12

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே!.

மகரராசி அன்பர்களே!

சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக் கும். பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குப் பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். பணவரவு திருப்தி தரும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

மகரம்

அதிர்ஷ்ட நாள்கள்: 9, 11

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீரங்கநாதர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா. அமர ரேறே. ஆயர்தம் கொழுந்தே. என்னும்,

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

கும்பராசி அன்பர்களே!

நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். உங்களுடைய சமயோசிதமான ஆலோசனை பெரிதும் பாராட்டப் படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். பணி செய்யும் பெண்களுக்கு அலுவல கத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

கும்பம்

அதிர்ஷ்ட நாள்கள்: 10, 13

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

மீனராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருக்கும் உறவினர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் கோரிக்கை நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் இன்னும் சில வாரங்கள் பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியம். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர் களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். புகுந்தவீட்டு உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.

மீனம்

அதிர்ஷ்ட நாள்கள்: 8, 11

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்

பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.