Amaran: “நான் இந்த கதையை தேர்ந்தெடுக்கல; உலகநாயகன் கொடுத்த தைரியம்!'' – சிவகார்த்திகேயன் பகிர்வு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். நெல்சன் விஜய் தொலைக்காட்சியிலிருந்த போது அவருடன் அங்கு பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அமரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற உண்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

கமல்ஹாசனின் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இவர்களுடன் மேஜர் முகுந்தனின் மனைவி இந்துவும் பங்கேற்று இருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. படம் குறித்து பேசிய ராஜ்குமார் பெரியசாமி, “இந்த படம் உருவாக்குவதில் தனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் ஒருமுறை தான் முகுந்தனின் மனைவி இந்துவை சந்தித்தபோது தான் அந்த விருப்பம் முழுமை அடைந்தது.” என்றார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இந்த படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியத்தை நடிகர் கமல்ஹாசன் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை தான் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தன்னை தான் இந்த படம் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், ” துப்பாக்கி எப்போதும் ரொம்ப ரொம்ப கனமானது. அதை சரியாக கையாள வேண்டும். அதை முடிந்த அளவுக்கு சரியாக கையாண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். அதற்கான தைரியத்தை கொடுக்க எங்களுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் இருக்கிறார். இந்த கதையை நான் தேர்ந்தெடுத்தாக நான் நினைக்கவில்லை. இந்த கதைதான் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. இதனை முக்கியமான பொறுப்பாக கருதி, கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறோம். மேஜர் முகுந்தன் ஒரு சூப்பர் ஹீரோ. அவரது வாழ்க்கையை திரையில் சொல்வதற்கு எனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வாய்ப்பு இது. இந்த படத்தில் மேஜர் முகுந்தன் மற்றும் அவரது காதல் மனைவி இந்துவின் வாழ்க்கையை வெளிப்படுத்துவது அதிகமான பொறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.