ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு: காங்., – தேசிய மாநாடு கட்சி கூட்டணி 40+ இடங்களில் முன்னிலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய தரவுகளின்படி காங்கிரஸ் கூட்டணி – 48, பாஜக – 29, பிடிபி – 4, பிற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆரம்ப நிலையில் காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி கூட்டணி – பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. படிப்படியாக வாக்கு எண்ணிக்கை நிலவர்த்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. தற்போதைய தரவுகளின்படி காங்கிரஸ் கூட்டணி – 48, பாஜக – 29, பிடிபி – 4, பிற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவர் ஒமர் அப்துல்லா அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்,

முதல் தேர்தல்.. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.

இத்தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 43 இடங்களிலும், பாஜக 27, மக்கள் ஜனநாயக கட்சி 7, மற்றவர்கள் 13 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தலுக்கு பிந் தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.