அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய சில நியமனங்களை இரத்துச் செய்தல்

அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய தேசிய மக்கள் சபை செயலகம்’ மற்றும் ‘விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்’ ஆகியவற்றை அமுல்படுத்துவதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவையை 2024-09-30 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை இருப்பதனால், அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவையை முடிவுறுத்த நேற்று (08.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதலை வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்கள் / ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை உள்ளமையால் இத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.