கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை …

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கடும் கொந்தளிப்பாகக் காணப்படும் என கடற்தொழில், நீரியல் வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 அக்டோபர் 11ஆம் திகதி காலை ஏழு மணி வரையான தகவலுக்கு இணங்க புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்துட்டை வரையான கடற் பகுதியில் சகல மீன்பிடி போக்குவரத்துக்களையும் மறு அறிவித்தல் வரை மேற்கொள்ள வேண்டாம் என சகல மீனவர்கள் மற்றும் கடல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சகலரும் காணப்படும் எச்சரிக்கையான காலநிலை தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.