இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்! எந்த தொடரில் தெரியுமா?

ஹாங்காங் சிக்ஸஸ் 2024 (Hong Kong Sixes 2024) போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 6 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்லி, கோஸ்வாமி, நதீம் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற இந்த ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டி தற்போது மீண்டும் நடைபெற உள்ளது. வித்தியாசமான முறையில் வேகமாக நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 12 நாடுகள் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடும். ஆக்ரோஷமாக நடைபெறும் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த தொடருக்கு பிசிசிஐ யாரை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனியர் வீரர்களை அனுப்ப உள்ளது.

SQUAD ANNOUNCEMENT

Here’s India’s Squad for the upcoming Hong Kong Sixes!

Look forward to an exciting tournament where The Men in Blue will showcase their amazing skills and lively energy!

Expect More Teams, More Sixes, More Excitement, and MAXIMUM THRILLS! 

HK6 is… pic.twitter.com/fdz3klixvC

— Cricket Hong Kong, China (@CricketHK) October 12, 2024

ஹாங்காங் சிக்ஸர்: இந்தியா அணி

ராபின் உத்தப்பா (கேப்டன்)
கேதர் ஜாதவ்
ஸ்டூவர்ட் பின்னி
மனோஜ் திவாரி
ஷாபாஸ் நதீம்
பாரத் சிப்லி
ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்)

ஹாங்காங் சிக்ஸரில் இந்தியா

இந்தியாவும் பாகிஸ்தானும் C அணியில் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3வது அணியாக இந்த குழுவில் உள்ளது. குரூப் Aவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் Bயில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகள் உள்ளன. குரூப் Dயில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த தொடர் மொத்தம் 12 குரூப்-ஸ்டேஜ் போட்டிகள் மற்றும் காலிறுதிப் போட்டிகள் கொண்ட வடிவமையில் நடைபெறும். அரையிறுதி போட்டிகள் நவம்பர் 3ம் தேதி நடைபெறும். மேலும் அதே நாளில் கிண்ண இறுதி, பிளேட் இறுதி மற்றும் கோப்பை இறுதிப் போட்டிகளும் நடைபெறும். உத்தப்பா, ஜாதவ், திவாரி மற்றும் பின்னி போன்ற சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2017ம் நடைபெற்ற பதிப்பில் தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.