ஆந்திராவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமராவதி: கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லூரில் 146 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், நெல்லூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் திருமலையில் சுவாமியை தரிசிக்க செல்லவும், தங்கும் அறைகளுக்கு திரும்பவும் போதிய வாகன வசதிகள் இன்றி பக்தர்கள் அவதிபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.