பிரதமர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கிடையில் (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் மாணவ நலன்புரி விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரை முகம்கொடுத்த தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் படையணி, மாணவர் உரிமைக்கான படையணி மற்றும் அதன் கீழுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், வைத்திய பீட மாணவர் செயற்பாட்டாளர் குழு மற்றும் அனைத்து மருத்துவ பீட மாணவர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் படையணி, அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் படையணி, சமுத்திர பல்கலைக்கழக மாணவர் சங்கம், பொறியியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர் சங்கம், மொரட்டுவை பொறியியல் பீட மாணவர் சங்கம் உள்ளிட்ட பல மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.