Bloody Beggar: இந்தப் படத்தில் கவின் நடிக்க வந்தது எப்படி?-இயக்குநர் சிவபாலன் அளித்த பதில் இதுதான்!

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பிளடி பக்கர்’.

இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பிளடி பக்கர்

அதில் பேசிய சிவபாலன், ” நான் நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். படம் பண்ண தயாரானப்போது அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். அவர் நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். இந்தக் கதையை எழுதும் போது கவின் இல்லை. ஆனால் எழுதி முடித்ததும் யாருமே பிச்சைக்காரனாக யோசிக்க முடியாத ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் அவரிடம் பேசினேன்.

சிவபாலன்

அவர் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்தார். ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. நான் எழுதிய கதாபாத்திரத்துக்கு கவின் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் சிறப்பாக அமைய காரணமாக இருந்த என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி ” எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.