`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' – விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

“எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்” என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.

தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், “ஆளுநர் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட திருநாடு என்ற வார்த்தை விடப்பட்டது தவறானது எனினும், அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட பின்னரும், தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன. ஒரு பக்கம் இந்தி படி என ஒரு கட்சி கூறுகிறது, மற்றொரு பக்கம் படிக்காதே என வேறொரு கட்சி கூறுகிறது.

ஸ்டாலின் – ஆளுநர் ரவி

தமிழ் மொழியை 100 % கற்றுக்கொண்டு, உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளியூர் செல்லும் நபர்கள் என்ன செய்வது? அவர்கள் ஆந்திரா, பெங்களூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றால், அந்த உள்ளூர் மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும். ஒரு மொழியை படிக்காதே என சொல்லவும், கட்டாயம் நீ இதைத்தான் படிக்க வேண்டும் எனச் சொல்வும் இங்கு யாருக்கும் உரிமை என்பது இல்லை. இந்த உலகில் வானுக்கு எல்லை இல்லை என்பதைப்போல, நமது அறிவுக்கும், கற்றல் தேடலுக்கும் எல்லை இல்லை. பல விஷயங்களையும், மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.