TVK : "தன்னெழுச்சியாக இளைஞர்கள் வர இதுதான் காரணம்!" – விஜய் மாநாடு குறித்து ஆர்.பி.உதயகுமார் கருத்து

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. வெற்றிக் கொள்கை திருவிழா என்ற அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியினரும் விஜய் குறித்து எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றனர் என அறிவதற்கான ஆர்வம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் விஜய்யின் மாநாடு குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “நேற்றைய மாநாடு விஜய்க்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமதர்ம கொள்கையை கடைபிடிப்பவர்கள் அதிமுகவினரே. புரட்சித்தலைவர் தான் முதன்முதலில் இந்த சமதர்ம அடிப்படையிலான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார்.

tvk vijay

அத்தனை இளைஞர்கள் தன்னெழுச்சியாக வருகிறார்கள் என்றால், இன்றைய இளைய சமுதாயத்துக்கு ஆளும் அரசின் மீதிருந்த வெறுப்புதான் விஜய் மீதான விருப்பமாக மாறியிருக்கிறது.

அதிமுகவுக்கு விஜய்யால் எள் அளவுக்கு கூட பாதிப்பு ஏற்பட வாய்பில்லை”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.