சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான தேர்தல் கடமை தொடர்பான செயலமர்வு

பாராளுமன்றத் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (28) இடம் பெற்றது.  

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற, சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கான இச் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (28)  இடம் பெற்றது.

சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதிகள் என்பன தொடர்பாக விரிவாகத் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.