“ஒவ்வொரு முறையும் அடிகளும், வலிகளும்தான்; பிரச்னை வந்துகிட்டே இருக்கு..'' -வருந்தும் சமுத்திரக்கனி

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’.

இப்படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சமுத்திரக்கனி தனது படங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “ இந்தப் படம் பொருளாதார ரீதியாக சம்பாதித்ததா? என்றால் நிச்சயமாக இல்லை. என்னுடைய தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான்.  உலகம் முழுவதும் இந்தப் படம் சென்றடைந்துவிட்டது. ஆனால் எங்கு தவறு நடந்தது என்றால் வெளியீட்டில்தான்.

திரு. மாணிக்கம்

ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது இருக்கக்கூடிய பிரச்னைதான் இந்தப் படத்தை கொன்றுவிட்டது.  தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்கில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது என்றே தெரியவில்லை. எத்தனையோ நல்ல படங்கள் எடுக்கிறோம். ஆனால் அது வெளியாகும்போது நிறைய பிரச்னைகளை சந்திக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த தவறு செய்துவிடக்கூடாது என்று நினைப்பேன்.

ஆனால் அப்பா படத்தில் தொடங்கி இப்போது இந்தப் படம் வரைக்கும் பிரச்னைத் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் சிராய்ப்புகள், அடிகள், வலிகள்தான். ஆனால் படைப்பு நன்றாக இருக்கிறது. உண்மையாக இருப்பவர்களை சினிமா என்றும் கைவிடாது.

ஒரு படத்தை எடுக்கும்போது உள்ள சந்தோஷம் வெளியாகும்போது இல்லை. சினிமா காப்பாற்றும் என்று நம்புகிறேன். ஓடிடியால்தான் திரு.மாணிக்கம் திரைப்படம் மக்களைச் சென்றடைந்திருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.