டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த சாகிப் மக்மூத்

புனே,

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 4-வது போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேமி சுமித் மற்றும் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாகீப் மக்மூத் ஆகியோர் இடம்பெற்றனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் அடித்தது. இதன் பின் 2-வது ஓவரை வீசிய சாகீப் மக்மூத் இந்திய அணியை நிலைகுலைய வைத்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் சாம்சனை வீழ்த்திய அவர் 2-வது திலக் வர்மாவையும், கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவையும் அவுட்டாக்கினார். அத்துடன் அந்த ஓவரில் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் மெய்டனாக வீசினார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காத முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை சாகீப் மக்மூத் படைத்துள்ளார்.

இந்திய அணி தற்போது வரை 14 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் அடித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.