இண்டர்போல் அமைப்பால் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த பிரபல தாதா ஜோகிந்தர் கியோங் பிலிப்பைன்சிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானா போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜோகிந்தர். இவர் மீது கொலை, கொள்ளை குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பானிப்பட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இண்டர்போல் அமைப்பும் ரெட் நோட்டீஸ் வெளியிட்டு தீவிரமாக தேடிவந்தது.
இந்த நிலையில், இந்தியாவிலிருந்து தப்பிய அவர் இறுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பிலிப்பைன்சில் பிடிப்பட்ட ஜோகிந்தர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா வந்தடைந்தார். இந்திரா காந்தி சர்வதேச விமானத்தில் வந்திறங்கிய அவரை பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் டெல்லி போலீசிடம் நேற்று ஒப்படைத்தனர்.