தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: சென்னை, மன்னார்குடி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை; 2 பேர் கைது

சென்னை: தடை செய்​யப்​பட்ட பயங்​கரவாத அமைப்​புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்​குடி உட்பட தமிழகத்​தில் 6 இடங்​களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்​தினர். இதில் 2 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன.

இந்தியா​வில் ஹிஸ்ப்​-உத்​-தஹ்ரிர் என்ற பயங்​கரவாத அமைப்​புக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்​புக்கு ஆதரவாக சிலர் செயல்​பட்டு வருவ​தாக​வும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்​கத்​தில் சேர்க்க முயற்சி நடந்து வருவ​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர கண்காணிப்​பில் ஈடுபட்​டுள்​ளது. தமிழகத்​தில் இதுதொடர்பாக என்ஐஏ ஏற்கெனவே ஒருமுறை சோதனை நடத்​தி​யுள்​ளது.

இந்நிலை​யில், 2-வது முறையாக தமிழகத்​தில் நேற்றும் என்ஐஏ தீவிர சோதனை நடத்​தி​யது. திரு​வாரூர் மாவட்டம் மன்னார்​குடி ஆசாத் தெருவை சேர்ந்த மன்னை பாவா என்ற பாவா பக்ருதீன் (44) வீட்​டில் சோதனை நடைபெற்​றது. சென்னை​யில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் தீவிர சோதனை​யில் ஈடுபட்​டனர். 5 மணி நேர சோதனைக்கு பிறகு, பாவா பக்ருதீனை அதிகாரிகள் கைது செய்து அழைத்​துச் சென்​றனர். அவரது செல்​போன், பென்​ட்​ரைவ், வங்கி கணக்கு புத்​தகம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்​தனர். இவரது வீட்​டில் ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்​தியது குறிப்​பிடத்​தக்​கது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், தாம்​பரம் அடுத்த முடிச்​சூர் இபி காலனி பகுதி​யில் வசிக்​கும் கபீர் அகமது (50) என்பவரது வீட்​டிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். இவரது வீட்​டில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2024-ம் ஆண்டும் சோதனை நடத்​தினர். அப்போது, வீட்​டில் அவர் இல்லை. சிம்​கார்டு, புத்​தகம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்​பற்றி சென்​றனர்.

இந்நிலை​யில், மண்ணிவாக்கம் விரிவு, ராஜாத்தி கலைஞர் நகர் பகுதி​யில் உள்ள ஒரு வீட்​டில் கபீர் அகமது இருப்​பதாக தெரிய​வந்​தது. இதையடுத்து, அந்த வீட்​டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்​தினர். அங்கிருந்த கபீர் அகமதுவை கைது செய்து, சென்னை​யில் உள்ள என்ஐஏ தலைமை அலுவ
ல​கத்​துக்கு அழைத்து சென்​றனர்.

சென்னை, மன்னார்​குடி தவிர தமிழகத்​தில் மேலும் 4 இடங்​களி​லும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, டிஜிட்டல் ஆவணம் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்​பற்றி​யுள்​ளனர். தடை செய்​யப்​பட்ட அமைப்​புக்கு ஆள்​சேர்க்​கும் நட​வடிக்கை​யில் ​யாரேனும் ஈடு​பட்​டுள்​ளனரா என கண்​காணித்து வரு​வதாக என்ஐஏ தரப்​பில் கூறப்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.