மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு சித்ரவதை செய்த காதலியைக் காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் சீமா காம்ப்ளே (42). இப்பெண் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார். சீமா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். தனக்கு இருக்கும் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி தனக்குக் கடன் கொடுக்கும்படி சீமாவிடம் ராகுல் கேட்டுள்ளார். சீமாவும் ரூ.2.5 லட்சம் கடனாகக் கொடுத்தார். நாளடைவில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடு அல்லது என்னைத் திருமணம் செய்து கொள் என சீமா தெரிவித்தார். ஆனால் ராகுல் பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை. அதேசமயம் திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இல்லை. அங்குள்ள சாய்பாபா கோயில் அருகே இருவரும் சந்தித்துக்கொண்டபோது இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ராகுல் தன்னிடம் இருந்த கத்தியால் சீமாவைச் சரமாரியாகக் குத்தினார். அங்கு நின்றவர்கள் இதனைத் தடுக்க முயன்றனர். உடனே அவர்களையும் கத்தியால் குத்தி விடுவேன் என்று மிரட்டினார் ராகுல். ராகுல் சரமாரியாகக் குத்தியவுடன் சீமா ரத்தவெள்ளத்தில் சரிந்தார். உடனே சம்பவ இடத்திலிருந்து ராகுல் தப்பி ஓடிவிட்டார்.
காயம் அடைந்து கிடந்தவரை அங்குள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் சீமா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராகுலைக் கைது செய்தனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பணம் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே சீமா போலீஸிலும் புகார் செய்திருந்தார். ஆனாலும் ராகுல் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs